Wednesday, 27 August 2008

திருவாசகம்

திருஅம்மானை

ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோநாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்

--மாணிக்கவாசகர்

பாடல்- 190

No comments: